செய்திகள்

பால் தினகரன் புத்தாண்டு பிரார்த்தனை

Makkal Kural Official

சென்னை, டிச 31–

‘‘இயேசு அழைக்கிறார் தலைவர் சகோதரர் பால் தினகரன், புத்தாண்டு பிரார்த்தனையில் 2025ம் ஆண்டானது சநதோஷம் நிரம்பி வழிகிறதாகவும் (அப்போஸ்தலர் 2:17), சீர்ப்படுத்துகிறதாகவும், உங்களுக்கும் உங்களுக்கு அன்பானோருக்கும் தெய்வீக தயவு கிடைப்பதாகவும் அமையட்டும், தேவனுக்கு உங்கள் இருதயத்தை திறந்திடுங்கள். அவர் உங்களுக்குள் வாசம் பண்ணுவார்: உங்களை வழி நடத்துவார்: பூரணமாய் ஆசீர்வதிப்பார்’’ என்று தெரிவித்தார்.

எசேக்கியேல் 34–26ல் உள்ள வாக்குத்தத்தின் படி, இந்த ஆண்டு தேவனுடைய ஆசீர்வாதம் நிரம்பி வழியும் அளவுக்கு மழையாகப் பொழிகின்ற தருணத்தை குறிக்கிற ஆண்டாக உள்ளது.

‘‘ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப் பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்’’

அநேக வேளைகளில் பஞ்சகாலத்தைத் தொடர்ந்து சம்பூரணம் உண்டாயிருக்கும் இந்த ஆண்டில் பஞ்சம் மற்றும் துயரங்கள் முடிவுக்கு வந்து, அவர் உங்களுடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார். குறைவை நிறைவாக்குவார். பஞ்சகாலத்தை, செழிப்பின் காலமாக மாற்றுவார். எலியா தொடர்ந்து விசுவாசத்துடன் கேட்டபோது ‘‘மிகுந்த மழை பெய்தது’’ (1 ராஜாக்கள் 18:41) அதேபோல் தேவன், தம் ஜனங்களின் கூப்பிடுதலுக்கு பதில் அளிப்பதில் பிரியமாறிருக்கிறார் என்று நம்பி, ஊக்கமாக ஜெபித்து உங்களை அர்ப்பணியுங்கள். உங்கள் இருதயம், அவரது சித்தத்துடன் இசைந்திருக்கும்போது ஏற்ற வேளையில் அவர் தம் ஆசீர்வாதங்களை அருளுவார்.

பஞ்சத்திற்கு பிறகு விசுவாசமும் ஜெபமும் இருந்தால் தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற முடியும். இந்த ஆண்டில் முழு இருதயத்துடன் தேவைனை நீங்கள் தேடினால், உங்கள் வாழ்வில் அவரது கரம் பலமாய் அசைவாடுவதை காண்பீர்கள்.

‘நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது’’ (யாக்கோபு 5:16) என்று வேதம் உறுதியாய்க் கூறுகிறது.

ஆண்டவர் தம் ஜனங்களை தெய்வீக பாதுகாப்பு சூழ்ந்துகொள்ளும் என்று வாக்குப் பண்ணுகிறார். ‘பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்’ (சங்கீதம் 125:2) என்று வேதம் கூறுகிறது. இந்த வாக்குதத்தம் உங்களுக்கு ஆறுதலை தருவதாக, உங்கள் மேலும், உங்கள் பிள்ளைகள் மேலும் உங்களுக்கு அன்பானோர் மேலும் தேவ கரத்தின் பாதுகாப்பு விளங்கும்.

தேவனுடைய சீர்ப்படுத்தும் ஆசீர்வாதம், இந்த ஆண்டு உங்கள் மேல் வரும். தேவன் தனக்குச் செழிப்பை அளிக்கும் வரைக்கும் ஈசாக்கு எதிர்ப்புகளின் மத்தியில் தொடர்ந்து துரவுகளை வெட்டிக்கொண்டே இருந்தான் (ஆதியாகமம் 26:22) நீங்கள் அவ்வாறே வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை காண்பீர்கள். உங்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றை தேவன் திரும்ப தருவார், அவற்றை மிகுதியாய்ப் பெருகப்பண்ணுவார்.

இவ்வாறு புத்தாண்டுக்கான பிரார்த்தனையில் பால் தினகரன் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *