அவர் எழுதியது – மு.வெ. சம்பத்
ராஜம்மா, கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே தோன்றியது. இவர்கள் பெரும்பாலும் விழாக்களுக்குச் செல்வதைத் தவிர்த்தார்கள். இவர்கள் அடிக்கடி செல்வது காஞ்சீபுரம் மட்டுமே. மகா பெரியவாளைச் சந்தித்து வந்தால் மன சாந்தி கிடைப்பதாக உணர்ந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெரியவா சொல்லுவதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வார் மனதில். இவர்களுக்கு இது தவிர வாழ்வில் ஒரே பிடிமானம் ரவி தான். அவன் இவர் தம்பி பையன். ரவி வந்தால் வீடே கலகலவென மாறி விடும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் […]