செய்திகள் நாடும் நடப்பும்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் !

Makkal Kural Official

பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு

அன்காரா, மே 9–

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை கேட்கும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவிலான நடுநிலை விசாரணை தேவை என பாகிஸ்தான் தெரிவித்தது. இருப்பினும் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியது. இதனிடையே அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகள் பயங்கர வாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதனிடையே சீனா மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்தது.

விசாரணைக்கு துருக்கி ஆதரவு

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள இந்த சூழலில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கோரி வரும் சர்வதேச விசாரணைக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து துருக்கி பிரதமர் ரசிப் தைய்யிப் எர்டோகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றம், ஏவுகணைத் தாக்குதல்களால் பல பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும். அதனால் மோதல் மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *