கோவர்த்தன் தனது தாத்தா, அப்பா நடத்தி வந்த நிறுவனத்தை நன்கு மேம்படுத்தி நல்ல லாபம் ஈட்டிக் கொண்டு ஒரு தொழிலதிபராகவே வலம் வந்தார்.
இவர்கள் நிறுவனத்தில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்த சுமன் கோவர்த்தனுக்கு சற்று நெருக்கமானார். சுமன் கடுமையான உழைப்பாளி. திட்டம் தீட்டுவதில் வல்லவர். இவரால் நிறுவனத்திற்கு நிறைய ஆர்டர்கள் வந்து குவிந்தன.
சுமன் பொருட்கள் வாங்கி பணம் தராதவர்களிடம் முரட்டுத் தனமாக நடந்து வசூல் செய்து விடுவார். அப்பா காலத்து வாடிக்கையார்கள் சுமன் நடவடிக்கையால் விலகிச் செல்வது கோவர்த்தன் மனதுக்கு மிகவும் வேதனையைத் தந்தது. என்னசெய்வது என்று ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்து அந்த வாடிக்கையாளர்களை நேரில் சென்று பார்ப்பதென்று முடிவெடுத்து தனியாக சென்றார். தான் செல்வதை குறிப்பாக சுமனுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.
நாளாக நாளாக சுமன் இந்த நிறுவனத்தின் மூலம் கோவர்த்தனுக்குத் தெரியாமல் நிறைய பணம் சேர்த்தார். யாராவது ஒருவர் போய் சொல்லி விட்டால் நம் நிலைமை என்னாகும். நமது பணங்கள் நம் கை விட்டுப் போய் விடுமே என்ற பயம் தொற்றிக் கொள்ள, நம்மை காத்துக் கொள்ள சிறந்த வழி நிறுவனத்தில் இருந்து விலகி விடுவது என முடிவு செய்து கோவர்த்தனிடம் தான் சுயமாக தொழில் செய்யப் போவதாகவும் தங்கள் தொழிலல்ல என்றும் கூறி விலகினார்.
சுமன் விலகிய அடுத்த நாள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர் சுமனைப் பற்றி நிறைய தகவல்கள் கூறினார்கள். நாமும் அவருக்கு தகுதிக்கு மீறி உரிமை தந்து விட்டோமே என்று கோவர்த்தன் எண்ணினார்.
சுமன் விலகியதைக் கேட்ட பழைய வாடிக்கையாளர்கள் மறுபடியும் கோவர்த்தனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் தொடர்பை புதுப்பித்துக் கொண்டார்கள். கோவர்த்தன் மிகுந்த ஆனந்தமடைந்தார்.
சுமன் திடீரென்று ஒரு நாள் கோவர்த்தனத்தைப் பார்க்க வந்தார். அங்கு நிறுவனத்தில் உள்ளவர்கள் சுமனைக் கண்டதும் அவரை நோக்கி வந்து நலம் விசாரித்து விட்டு நீங்கள் இல்லாத அலுவலகம் வெறிச் சோடி உள்ளது என்றார்கள். சுமன் மனதிற்குள் நேரில் ஒரு பேச்சு. இல்லாவிட்டால் ஒரு பேச்சு என்று நினைத்தார். சுமனை வரவேற்ற கோவர்த்தன் தாங்கள் எங்கள் நிறுவனம் உயர பாடுபட்டதற்கு ஈடு இணையே கிடையாது என்றார். நிச்சயம் உங்கள் பிரிவு எங்களுக்கு வருத்தமே என்றார். தாங்கள் தற்போது என்ன செய்கின்றீர்கள் என்றார் கோவர்த்தனன். சுமன் நான் தற்போது எங்கள் கிராமத்தில் 50 பசு மாடுகளை வைத்து ஒரு பால் பண்ணை வைத்துள்ளேன். பெரும்பாலும் மாதத்தில் 20 நாட்களுக்கு மேலாக கிராம வாழ்க்கை தான் என்றார் சுமன். நான் விரும்பிச் செய்யும் தொழில் என்றார். பண்ணை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்றார். தரமான பால் தருவதே என் நோக்கம் என்றார். பசுக்களுக்கு இயற்கை உரமே தரப் படுகிறது என்றார். பசுக்கள் உணவுக்காக எங்களது விளை நிலத்தில் பல தரப்பட்ட புற்கள் மற்றும் தானியங்கள் பயிரிடப் படுகிறது. மேற்பார்வையை நானே செய்கிறேன் என்றார் சுமன். நல்ல லாபம் வருகிறது என்றார். கோவர்த்தன் பாராட்டுக்கள் என்று கூறினார். பின் சுமன் சார் ஊருக்கு வெளியே உங்களுக்கு சொந்தமான வீடுகளில் ஒன்றை விற்கப் போவதாகக் கூறினீர்களே. எனது நண்பன் கேட்கிறார் தருவீர்களா என்றார் சுமன், ஏனென்றால் தான் கேட்டால் தர மாட்டார் என்று எண்ணத்தில்.
கோவர்த்தன் சற்று அவகாசம் கொடுங்கள் என்றார். கோவர்த்தன் அது எனது தாத்தா கட்டியது என்றார். பூட்டியிருந்தாலும் அது நன்கு பரராரிக்கப்படுகிறது என்றார். சுமன் ஒரு வழியாக பேசி அவர் நண்பர் அலுவலகத்திற்கு வாடகைக்கு இடத்தைப் பேசி முடித்தார். கோவர்த்தன் அடுத்த வாரம் நண்பருடன் வந்து முன்பணம் செலுத்தி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு சாவி பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். சுமன் அந்த வீட்டை எப்படியாவது வளைக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தார்.
இரண்டு நாட்களில் கோவர்த்தனன் வீட்டிற்கு நண்பருடன் வந்தார் சுமன். கோவர்த்தன் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அங்கு வந்திருந்த அவர் வக்கீலிடம் சரி பார்த்து விட்டு, வக்கீலுடன் அந்த வீட்டிற்குச் சென்று சுத்தமாக்கி வைத்திருந்த வீட்டை கோவர்த்தன் நண்பர் செல்வனிடம் ஒப்படைத்தார்.
வாடகையை ஒழுங்காகத் தந்து விடுங்கள். நான் சுமனிடம் கேட்க மாட்டேன் என்றார் கோவர்த்தன்
கோவர்த்தனதுக்கு சுமன் இந்த வீட்டை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார் என்ற எண்ணம் வந்தது. தனது வக்கீலிடம் இது பற்றி பேசினார் கோவர்த்தன்.
வக்கீல் நாம் சுமனுக்கு வாடகைக்கு விடவில்லையே, வாடகை ஒப்பந்தம் பதினொரு மாதம் தானே போட்டுள்ளோம். அந்த காலம் முடியும் வேளையில் நாம் நமக்கு வீடு வேண்டுமென்று சொல்லி இருப்பவரை காலி பண்ணச் சொல்லலாம் என்றார்.
கோவர்தனத்திற்கு சுமன் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. மாதங்கள் உருண்டோட, செல்வன் வீட்டில் கால் பகுதியைத் தான் உபயோகிக்கிறார் என்ற செய்தி வந்ததும் கோவர்த்தன் தனது வக்கீலுடன் ஒரு நாள் அங்கு சென்றார். வீட்டைச் சுற்றிப் பார்த்தவர் நன்கு பராமரிக்கப் பட்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்து செல்வனைப் பாராட்டினார்.
செல்வன் அலுவலக ஊழியர்களும் சிரித்த முகத்தோடு இருந்தது கண்டு மகிழ்ந்தார். சரி நாங்கள் வருகிறோம் என்று கூறி விடைபெற்றார்கள்.
சுமன் செல்வனைத் தொடர்பு கொண்டு தனது நண்பர் முருகன் பதினைந்து நாட்கள் சில பொருட்களை வைத்துக் கொள்ள இடம் தர முடியுமா, ஏனெனில் அவர் தனது வீட்டை பராமரிப்பு வேலைகள் செய்வதால் முக்கியமான சாமான்களை வைக்க தடுமாறுகிறார் என்றார்.
செல்வன் வீட்டு உரிமையாளரிடம் கேட்காமல் எப்படி செய்வது என்று கூற,
சுமன் பதினைந்து நாள் தானே ஏதாவது வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
மறு நாளே கனமான பத்து இரும்பு பெட்டிகள் வந்து இறங்கின. அவைகளை அவரது ஆட்கள் மாடியில் உள்ள ஒரு அறையில் வைத்து விட்டு அந்த அறையை தாங்கள் கொண்டு வந்த பூட்டினால் பூட்டினார்கள்.
செல்வன் இதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்க, வந்தவர்கள் எங்களுக்குத் தெரியாது என்றார்கள். வந்தவர்களில் ஒருவர் நான் முருகனின் தம்பி என்றார். பின் செல்வன் ஒரு பேப்பரில் இங்கு வைத்துள்ள பொருட்கள் சுமன் சொன்னதின் பேரில் முருகனுக்குச் சொந்தமான சீல் வைக்கப்பட்ட இரும்பு பெட்டி பொருட்கள் பதினைந்து நாட்கள் வைக்க அனுமதி அளித்து, அதற்குப் பின் தாமதிமின்றி பொருட்களை காலி செய்ய வேண்டும். மீறினால் அவைகள் தங்கள் இருப்பிடத்திற்கு அனுப்பப்படும் என்று எழுதி முருகன் தம்பி கையொப்பம் இட வாங்கிக் கொண்டார் செந்தில்.
இரண்டு நாட்கள் கழித்து கோவர்த்தகைத் தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரிகள், ஊருக்கு வெளியே உள்ள தங்கள் வீட்டில் சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்கள். நீங்கள் அங்கு வர வேண்டும் என்றார்கள். கோவர்த்தன் தற்போது அந்த வீட்டில் செல்வன் தனது அலுவலகத்தை வைத்துள்ளார் என்று கூறி அவர் கைப்பேசி எண்ணைத் தந்து விட்டு, நான் சரியாக இன்னும் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்றார் கோவர்த்தன்.
ஒரு மணி நேரத்தில் வக்கீலுடன் வந்த கோவர்த்தன் செல்வனைப் பார்த்து என்ன என்று வினவ, செல்வன் முருகன் வந்தது மற்றும் பொருட்கள் வைத்ததையும் கூறினார்.
இதற்குள் செல்வன் முருகனை ஆட்கள் வைத்து அழைத்து வந்திருந்தார்.
காவல் துறை அதிகாரிகள் செல்வன் மற்றும் முருகனிடம் விசாரணையை முடக்கி விட, செல்வன் இவர் நேரடியாக எனக்கு தெரிந்தவர் அல்லர் என்றார்.
முருகனும் காவல் துறை அதிகாரிகளிடம் இவரை ஒரு தரம் தான் நான் பார்த்துள்ளேன் என்றார்.
இதற்குள் கோவர்த்தன் தான் சில நாட்களுக்கு முன் வந்து சென்றதையும் தனது வக்கீல் அப்போதுள்ள வீட்டை புகைப்படம் எடுத்ததையும் காட்டினார்.
காவல்துறை அதிகாரிகள் செல்வன் மற்றும் முருகனைப் பார்த்து உங்கள் பரிச்சியம் எப்படி ஏற்பட்டது என்று கேட்க இருவரும் ஒருமித்த குரலில் சுமன் என்றார்கள்.
அவர் எங்குள்ளார் என்று கேட்க, அவர்கள் விலாசங்கள் தர, அடுத்த இரண்டு மணி நேரத்தில் சுமன் அழைத்து வரப் பெற்றார்.
சுமன் வந்ததும் முருகன் என்னப்பா என் பெயரை உபயோகித்து மாட்டி விட்டாயே என்றதும்
அதிகாரிகள் அவரை சாந்தப் படுத்த,
அதற்குள் முருகன் தம்பி அங்கு வந்து சேர, அவரையும் அதிகாரிகள் அமரச் செய்தார்கள்.
பின் எல்லோருமாக மாடிக்குச் சென்றார்கள். சாவியை வாங்கி அறையைத் திறந்து பார்க்க பத்து இரும்பு பெட்டிகள் இருந்தன. அதிகாரிகள் சாவி யாரிடம் உள்ளது என்று கேட்க,அங்கிருந்தவர்கள் எங்களிடம் இல்லையென்றார்கள். அதிகாரிகளிடம் செல்வன் தான் எழுதிய வாங்கிய பேப்பரைத் தந்தார். உடனே அதிகாரிகள் செல்வனை இதெல்லாம் சரி, என்ன பொருள் என்று தெரியாமல் வாங்கி வைப்பாயா என்று கூறினார்கள். முருகன் தம்பியிடம் யார் உன்னிடம் கொடுத்தார்கள் என்று கேட்க, அவன் அண்ணணைக் காட்டினார். முருகன் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் இதற்கு எல்லாம் பின்புலம் சுமன் தான் என்றார்.
சாவி கிடைக்கவில்லையென்றால் உடைத்து விட வேண்டியது தான் என்றார்கள் காவல் துறை அதிகாரிகள். அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வந்து சுமனிடம் இனிமேல் நீங்கள் தப்ப முடியாது உண்மையை சொல்லுங்கள். சாவியைத் தாருங்கள் என்றதும் சுமன் என்னிடமில்லை அது இன்னொரு நண்பரிடம் உள்ளது எனக் கூறினார்., அவரை வரவழைத்தார்கள். வந்தவர் காவல் துறை அதிகாரிகளைக் கண்டதும்,இதெல்லாம் சுமன் வேலை தான் என்று கூறினார்.
தான் இனிமேல் தப்ப முடியாதென்ற நிலையில் சாவியை வந்தவரிடம் வாங்கி அதிகாரிகளிடம் தர,
அவர்கள்அதை திறந்து பார்க்க
அவ்வளவும் கட்டு கட்டான நோட்டுகள் ஆக இருந்தன. அதிகாரிகள் நேரடியாகவே சுமனை நெருக்க, சுமன் நான் கோவர்த்தனனை பழி வாங்கவே இப்படி செய்தேன். இது அனைத்தும் எனது சொந்த பணம் தான் என்றார் சுமன். அதிகாரிகள் இன்னும் நெருக்க, சுமன் தீய வழியில் சேர்த்தது என தெரிய வந்தது. அதிகாரிகள் இவர்கள் எல்லோரும் தான் சாத்வீக வழியில் உன்னைப் பழி வாங்கியுள்ளார்கள் என்று கூறி சுமனை அழைத்துச் சென்றனர், போவதற்கு முன்னால் ஆள் நன்கு தெரியாமல் எதுவும் செய்யாதீர்கள்.
எல்லோருடைய கையொப்பம் வாங்கிய வக்கீல் தந்த மனுவைப் பெற்றுக் கொண்டு அழைக்கும் போது வாருங்கள் என்று கூறி சுமனுடன் எல்லாப் பொருட்களையும் அள்ளிக் கொண்டு போனார்கள்.
நல்ல வேலை தப்பித்தோம் எல்லோரும் சுமனிடமிருந்து என்றார்கள்.
அப்போது தெருவில் சென்ற வண்டியில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் வரிகள் ஒலித்தது.