செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் 29ம் தேதி கடலுக்கு செல்ல தடை

Makkal Kural Official

சென்னை, ஜன. 25–

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் வரும் 29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி காலை 6.30 மணி அளவில் விண்ணில் ஏவப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

#ISRO #SRI HARI KOTA #rocketlaunch

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *