தென்காசி திருவள்ளுவர் கழகத்துக்கு தமிழ்த்தாய் விருது
சென்னை, ஜன.8-–
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 26 பேருக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பல்வேறு விருதுகளை வழங்கினார்.
2023–ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பெறும் பல்வேறு விருதுகளுக்கு விருதாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ்த்தாய் விருது -– தென்காசித்திருவள்ளுவர் கழகம், கபிலர் விருது – கவிஞர் முத்தரசன் (வயது – 75, பெரம்பலூர் மாவட்டம்), உ.வே.சா விருது – முனைவர் ஆ.இராமநாதன் (வயது – 73, சென்னை), கம்பர் விருது – முனைவர் ம.பெ.சீனிவாசன் (வயது – 81, மதுரை மாவட்டம்), சொல்லின் செல்வர் விருது – முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா (வயது – 53, சென்னை மாவட்டம்),
உமறுப்புலவர் விருது – தா.சையது காதர் ஹீசைன் (வயது – 81, தஞ்சாவூர் மாவட்டம்), ஜி.யு.போப் விருது – முனைவர் வெ.முருகன் (வயது– 73, சென்னை மாவட்டம்), இளங்கோவடிகள் விருது – முனைவர் சிலம்பு நா.செல்வராசு (வயது – 68, புதுச்சேரி), அம்மா இலக்கிய விருது – முனைவர் சரளா இராசகோபாலன் (வயது – 81, சென்னை மாவட்டம்),
சிங்காரவேலர் விருது
சிங்காரவேலர் விருது – மு.சுப்பிரமணி (வயது – 56, தேனி மாவட்டம்), அயோத்திதாசப் பண்டிதர் விருது – முனைவர் மு.சச்சிதானந்தம் (வயது – 56, புதுச்சேரி), மறைமலையடிகளார் விருது – புலவர் இராமலிங்கம் (வயது – 92, சென்னை மாவட்டம்), அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் பா.அருள்செல்வி (வயது – 69, கடலூர் மாவட்டம்), காரைக்கால் அம்மையார் விருது – முனைவர் கி.மஞ்சுளா (வயது – 56, சென்னை மாவட்டம்), சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது – சட்டக் கதிர் (ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத்), முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – முனைவர் இரா.அகிலன் (வயது – 45, சென்னை மாவட்டம் – சங்க இலக்கிய உருபனியியல் பகுப்பான் மென்பொருள்)
சிறந்த மொழிபெயர்ப்பாளர் 2023–ம் ஆண்டுக்குரிய 10 விருதாளர்கள்:
பிரபா ஸ்ரீ தேவன் (வயது – 75, சென்னை மாவட்டம்), சீனி இராச கோபாலன் (வயது – 80, சென்னை மாவட்டம் ), இந்திரன் (எ) பி.ஜி.இராஜேந்திரன் (வயது -76, சென்னை மாவட்டம்), அலமேலு கிருஷ்ணன் (வயது – 74, சென்னை மாவட்டம்), ருத்ர துளசி தாஸ் (எ) இளம் பாரதி (வயது – 90, சென்னை மாவட்டம்), பேராசிரியர் க.முத்துச்சாமி (வயது -79, சிவகங்கை மாவட்டம்), நடராஜன் முருகையன் (வயது – 83, சென்னை மவாட்டம்), நிர்மாலயா (எ) எஸ்.மணி (வயது – 62, நீலகிரி மாவட்டம்), இ.பா.சிந்தன் (வயது – 41, சென்னை மாவட்டம்), கௌரி கிருபானந்தன் – (வயது – 67, சென்னை மாவட்டம்).
ரூ.55 லட்சம்
தெரிவு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கத்தில் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்புக்கு ரூ.5 லட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடையும் சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது பெறும் விருதாளருக்கு ரூ.2 லட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடையும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினை பெறும் 10 விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம், தகுதியுரை, பொன்னாடையும் ஏனைய விருதினை பெறும் விருதாளர்களுக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியரை, பொன்னாடையும் என 26 விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக மொத்தம் 55 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டன.
தமிழுக்குத் தொண்டு செய்யும் தமிழர்களாய் போற்றி வரும் தமிழ் மொழியை நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழியைப் போற்றுவோம். தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருப்போம். அதே நேரத்தில் தமிழை அகத்தில் மனம் குளிர்வோம் என்று கூறி அனைவரையும் வாழ்த்துகிறேன் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துரையில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் மற்றும் அறிஞர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.