செய்திகள்

பராமரிப்பு பணி: இன்று 18 மின்சார ரயில் சேவை ரத்து

Makkal Kural Official

சென்னை, மார்ச் 20–

பராமரிப்பு பணி காரணமாக இன்று 18 மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் மின்சார ரெயில்களானது மிகவும் முக்கியமான போக்குவரத்தாக இருந்து வருகிறது. இந்த மின்சார ரெயிலை தினசரி லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரெயிலானது ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி காலை 10.15 முதல் மாலை 4.30 மணிவரை இந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 16 புறநகர் ரயில்கள் முழுமையாகவும், இரண்டு ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுகிறதுது. இதற்கு மாற்று ஏற்பாடாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *