செய்திகள்

பஞ்சாப் எல்லையில் பாதுகாப்பு படை கண்டெடுத்த பாகிஸ்தானின் டிரோன்

பஞ்சாப், ஜூன் 22–

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டம் ஜோதவாலா கிராமத்தில் சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானின் டிஜேஐ மேட்ரிஸ் 300 ஆர்டிகே (DJI Matrice 300 RTK) என்ற ஆளில்லா விமானத்தை இன்று காலை எல்லை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

மேலும், ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 2 கிலோ எடையுள்ள இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகள் டிரோனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *