செய்திகள்

பஞ்சாப்பில் அதிகாலையில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சண்டிகர், நவ. 14–

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்கு-வடமேற்கில் 145 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *