செய்திகள்

நெஞ்சு வலி காரணமாக துணை ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி

Makkal Kural Official

புதுடெல்லி, மார்ச் 9:

துணைத் ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று அதிகாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

73 வயதான அவருக்கு நெஞ்சு வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, எய்ம்ஸ் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங்கின் பராமரிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) அனுமதிக்கப்பட்டார்.

“அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டாலும், தீவிர கண்காணிப்பில் உள்ளார்” என்று எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, தங்கரின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *