செய்திகள்

நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி: ஒருவர் நிலை என்ன?

நீலகிரி, டிச. 13–

நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள சீகூர் ஆணிக்கால் மாரியம்மன் கோவிலில், பூஜை செய்ய 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர். இந்நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரை சீகூர் ஆற்றில் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

2 மணி நேர தேடுதல் பணிக்கு பின் மூன்று பேரின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளத்தில் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *