நத்தம், ஜன. 17–
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி-வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (34). சிங்கப்பூரில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் தனது மனைவி குருந்தாயிவுடன் நத்தம் அருகே சிரங்காட்டுபட்டியில் உள்ள மனைவியின் உறவினர் முருகன் என்பவரது வீட்டிற்கு வந்தார். அப்போது முருகனின் காளையை அவருடன் சேர்ந்து துண்டுகள் வாங்குவதற்காக அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக காளையின் மூக்கு கயிறு அவிழ்ந்து பழனியாண்டியை குத்தித் தள்ளியது. இதில் இரத்த வெள்ளத்தில் பழனியாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைபற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸ்- சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.