செய்திகள்

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி மோதியது; 2 குழந்தை உட்பட 3 பேர் பலி

Makkal Kural Official

புனே, டிச. 23–

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

புனே நகரின் வகோலி சௌக் பகுதியில், நடைபாதையில் 12 பேர் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த வழியாக, வந்த லாரி, நிலைதடுமாறி அவர்கள் மீது ஏறியது. இதில் 2 குழந்தை உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் வைபவி பவார், வைபவ் பவார், விஷால் பவார் (வயது 22) என அடையாளம் தெரியவந்துள்ளது.

மேலும், 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக சசூன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

லாரியை ஓட்டி வந்த 26 வயதான சங்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் டிரைவர் குடிபோதையில் இருந்தது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *