செய்திகள்

நடிகை கஸ்தூரி ஆந்திராவில் தலைமறைவு?

Makkal Kural Official

சென்னை, நவ. 16–

தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 3-ந்தேதி பிராமணர் சமுதாயத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் அறிவித்தார்.நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ், தெலுங்கு மக்களிடையே வன்முறையை ஏற்படுத்த காத்திருக்கும் வெடிகுண்டு போல நடிகை கஸ்தூரி பேசியுள்ளார் என்று கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். இந்நிலையில் ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆந்திராவில் கஸ்தூரி தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *