சென்னை, டிச. 6–
நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு பரப்பக் கூடாது என்று சிங்கமுத்துவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் வடிவேலு, சிங்கமுத்து மீது பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
அனைத்து வழக்குகளும் முடிந்து விட்ட நிலையில், அவதூறு வழக்கில் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு மட்டும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு தாக்கல் செய்த பிறகும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பரப்புவதாக வடிவேலு தரப்பு வாதம் செய்தது. இவ்வழக்கில் சிங்கமுத்து தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.இந்தநிலையில் இந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வடிவேலுக்கு எதிராக அவதூறு பரப்பமாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.