செய்திகள்

தேனிலவுக்கு சென்ற டாக்டர் தம்பதி இந்தோனேசியாவில் நீரில் முழ்கி பலி

ஜகார்தா, ஜூன் 10–

இந்தோனேசியாவிற்கு தேனிலவு கொண்டாட சென்ற பூந்தமல்லியைச் சேர்ந்த புதுமண மருத்துவ தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விபூஷ்ணியா (வயது 25). இவர் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் மருத்துவரான லோகேஸ்வரன் (வயது 27) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 1 ந்தேதி பூந்தமல்லி தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடந்துள்ளது.

நீரில் மூழ்கி பலி

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ தம்பதியினர் தேன் நிலவு கொண்டாட பாலி தீவு மற்றும் இந்தோனேசியாவுக்கு சென்றனர். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கடல் பகுதியில் மோட்டார் போட்டில் சென்று போட்டோ ஷூட் நடத்திய போது, எதிர்பாராத விதமாக திடீரென இருவரும் நீரில் மூழ்கி இறந்து போனதாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில் நீரில் மூழ்கி இறந்து போன லோகேஸ்வரன் உடலை மீட்டு விட்டதாகவும், விபூஷ்னியா உடலை இந்தோனேசியா போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களது உயிரிழப்பு குறித்து இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இந்தோனேசியா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரது சடலத்தையும் சென்னைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதனர். தேன் நிலவு கொண்டாட சென்ற மருத்துவ தம்பதி வெளிநாட்டில் இறந்த போன சம்பவம் பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *