பாட்னா, ஜன. 27–
பீகாரில் குடியரசு தினமான நேற்று தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் அபிஷேக் ஜா என்ற நபர், தனியார் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றுவது வழக்கம். இந்த ஆண்டும் அபிஷேக் தேசியக் கொடியேற்ற சென்றபோது, இரும்புக் கொடிக் கம்பத்தில் 11,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவரை காப்பாற்ற முயன்ற 4 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.