செய்திகள்

துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அண்ணா தி.மு.வினர்

சென்னை, ஜன. 11–

துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்வு செய்தனர். இதுபற்றி முறைப்படி சபாநாயகரிடம் கடிதமும் கொடுத்தனர். ஆனால் இருக்கையை மாற்றுவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்னும் முடிவெடுக்கவில்லை. இருக்கை விவகாரம் தொடர்பாக நேற்றும் அண்ணா தி.மு.க.வினர் சபாநாயகரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனால் எடப்பாடி பழனிசாமி உள்பட அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கம்போல இன்றும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி அருகிலேயே அமர்ந்து இருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை. இறுகிய முகத்துடனேயே காணப்பட்டனர்.

துணைத்தலைவர் இருக்கை மட்டுமின்றி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் பிரச்சினை உள்பட பல்வேறு செயல்களை கண்டித்து கருப்பு சட்டை அணிந்ததாக அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *