செய்திகள்

தீபாவளி: உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

Makkal Kural Official

சென்னை, அக்.23–

தீபாவளி பண்டிகையையொட்டி, உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது.

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர் ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை களைகட்டியது. காலை 5 மணிக்கு தொடங்கிய சந்தையில் சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட அதிகமாக ஆடுகளை வாங்கிக் குவித்தனர்.

இதில், வெள்ளாடு செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 8,000 முதல் 20,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை இந்த சந்தையில் ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி இந்த வாரம் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *