2026-ல் ஒரே வெர்ஷன்தான்; அது அண்ணா தி.மு.க. வெர்ஷன்: எடப்பாடி
சென்னை, ஏப். 29–
சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ‘ஓ’போடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026ல் அண்ணா தி.மு.க. வெர்ஷன் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி… சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி… பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி… போதைப் பொருள் கடத்தலுக்கு தி.மு.க. அயலக அணியே சாட்சி… போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் தி.மு.க. இளைஞரணி கூட்டமே சாட்சி… ஸ்டாலின் மாடல் சமூக (அ)நீதிக்கு வேங்கைவயலே சாட்சி… ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி. இதில் இன்று வெர்ஷன் 2.0 லோடிங் ஆம்..
அண்ணா தி.மு.க. ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமீனில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!
2026-ல் ஒரே வெர்ஷன்தான் –அது அண்ணா தி.மு.க. வெர்ஷன்தான். மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெரிய ‘ஓ’ (0) வாக போட்டு #ByeByeStalin… என்று சொல்லும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது