செய்திகள்

திண்டிவனத்தில் அரசு மருத்துவமனை கட்டும் பணி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்

விழுப்புரம், மார்ச் 4–

திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும்பணியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட கலெக்டர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:திண்டிவனம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்கள் தலா 1935.00 ச.மீ பரப்பளவு வீதத்திலும், சாய்தள பரப்பு 700.00 ச.மீ, இணைப்பு பகுதி 95.00 ச.மீ என மொத்தம் 12,475 ச.மீ பரப்பளவில் அமையவுள்ளது. இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களில் 1,000 ச.மீ பரப்பளவில் மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கட்டடமும், தரைத்தளத்தில் 166.00 ச.மீ பரப்பளவில் பிணவறைக்கட்டமும், 63.00 ச.மீ பரப்பளவில் எச்.டி அறையும் கட்டப்பட்டவுள்ளது. இதன் மூலம், இப்பகுதியினை சோ்ந்த பொதுமக்களுக்கு உயர்ரக மருத்துவ வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலா, திண்டிவனம் சரர் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கரூப) பரிதி, அரசு தலைமை மருத்துவர் மரு.சாந்தகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி, திண்டிவனம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *