செய்திகள்

திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஜன. 11–

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் திடீர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மறுநாள் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்படவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் உள்ளதாகவும் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வயோதிகம் காரணமாகவே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *