அமெரிக்க ஆய்வில் தகவல்
நியூயார்க், ஏப். 6–
தாவரங்களுக்கு வலி உண்டு; உணர்ச்சியும் உண்டு, அதை சத்தமாக வெளி உலகுக்கு தெரிவிக்கவும் செய்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் ஆய்வு இதழான ‘செல்’ அண்மையில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:–
தாவரங்கள் நீரின்றித் தவித்தாலோ, கிளை, இலை வெட்டப்பட்டாலோ, மீஓலி அலைவரிசையில் ஒலி துடிப்பை வெளிப்படுத்துகின்றன. இது காற்றிலும் பரவக்கூடிய ஒலி தான். தக்காளி, புகையிலை செடிகளை ஆய்வகத்தில் வைத்து, அவற்றுக்கு நீர் விடாமல் கண்காணித்த போது, அவை வெளியிட்ட’டிக், டிக்’ ஒலியை விஞ்ஞானிகள் பெரிதுபடுத்தி பதிவு செய்தனர்.
மணிக்கு 35 முறை ஒலி
அந்த ஒலி நமக்கு, சோளப் பொறி வெடிப்பது போன்ற ஓசையை ஒத்திருக்கிறது. தண்ணீரின்றி தவித்தாலோ, கிளை வெட்டப்பட்டாலோ மணிக்கு 35 முறை செடிகள் ‘டிக், டிக்’ ஒலியை வெளியிட்டன என்ற கண்டறிந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே, தாவரங்களுக்கும் ஒரு மொழி இருக்கத்தான் செய்கிறது என்பதை நாமும் அறிந்து செயல்பட வேண்டும்.