சிறுகதை

தானம் – ராஜா செல்லமுத்து

நகரில் உள்ள பிரதான மருத்துவமனையில் மக்கள் கூடி நின்று கொண்டிருப்பார்கள்.

காரணம் ராஜேந்திரன் கைராசி மருத்துவர் என்பதுதான். அவர் குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் முதியோர் வரை அத்தனை பேருக்கும் சரியாக மருத்துவம் செய்வார் என்பது நகரில் இருக்கும் எல்லா மக்களுக்கும் தெரியும் .

அதனால் எப்போதும் கூட்டம் கூடி இருப்பார்கள். மருத்துவமனை இருக்கும் தெருவிற்கு அன்று புதிதாக ஆனந்தும் அசோக்கும் வந்தார்கள்.

அந்த மருத்துவமனையின் வெளியில் இருந்த பெயர் பலகையில் அவர்கள் பார்த்த விஷயம் வித்தியாசமாக இருந்தது. இதை மருத்துவமனையில் கேட்டு விடலாமா? இல்லை இதைக் கேட்டால் அவர்கள் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வார்களா? என்ற பயம் இருவருக்கும் இருந்தது. இருந்தாலும் கேட்டுத்தான் விடலாம் என்று முடிவு செய்து மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள்.

எப்போதும் கூட்டம் கூடிக் கொண்டிருக்கும் மருத்துவமனை என்பதால் அன்றும் கூட்டம் கூடி நின்றது.

இந்தக் கூட்டத்திற்குள் போய் இந்த சின்ன விஷயத்தை எப்படி கேட்பது? என்று அவர்களுக்குள் ஒரு தயக்கம் இருந்தது.

மருத்துவமனை வரவேற்புரைக்குச் சென்றார்கள். அவர்கள் எதை மருத்துவமனைக்கு வெளியே பார்த்தார்களோ ? அதை இந்த வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் கேட்டார்கள். அந்தப் பெண் இருவரையும் மேலேயும் கீழேயும் பார்த்தது.

இதெல்லாம் இங்க சொல்ல மாட்டாங்க. நீங்க போகலாம் என்றது .

இல்லைங்க அதப் பத்தி நாங்க தெரிஞ்சுக்க தான வந்திருக்கோம் சொல்ல முடியுமா? என்று இருவரும் கேட்டார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு டாக்டர் இருவரையும் விசாரித்து என்ன கேட்டு தகராறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

இல்ல சார் ஒரு சின்ன சந்தேகம் அதைக் கேட்டுப் போகத்தான் நாங்கள் நினைக்கிறோம் என்றான் ஆனந்த்.

என்னன்னு சாெல்லுங்க என்று மருத்துவர் கேட்ட போது

சார் எங்க ரெண்டு பேருக்கும் நோய் நொடியெல்லாம் இல்ல. ஆனா இந்த ஆஸ்பத்திரியில் ஒரு போஸ்ட் பார்த்தாேம். அது எங்களுக்கு வித்தியாசமான ஒரு விஷயத்தை பார்த்ததாக நினைப்பு வந்தது.

அதைத்தான் நான் என்னன்னு கேட்கிறோம் என்றான் அசோக்.

சொல்லுங்க உங்க பிரச்சனை என்ன ? என்ற அந்த மருத்துவர் கேட்டபோது

சார் மருத்துவமனையில இருக்கிற பெசிலிட்டிஸ் எந்த நோய்க்கு எல்லாம் மருத்துவம் பாக்குறிங்கன்னு எழுதி இருக்கீங்க. அதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்ல. ஆனா ஒரு சின்ன விஷயம் தான் எங்களைப் பாதிச்சது. அதை மட்டும் நான் கேட்கலாமா? என்றான் ஆனந்த்.

என்னன்னு சொல்லுங்க என்று அந்த மருத்துவர் கேட்க

ஒன்னும் இல்ல சார்.

எஸ் அப்படிங்கற எழுத்துக்கு பக்கத்துல சாந்தின்னு இருக்குது. இ பக்கத்துல எலிசபெத்துன்னு இருக்கு.

கே பக்கத்துல குமார்ன்னு இருக்கு.

ஆர் பக்கத்துல ராமன்னு இருக்கு இதுக்கு. என்ன அர்த்தம்னு தெரியலையே? என்று ஆனந்த் கேட்டவுடன்

ஆங்கிலத்தில இருக்கிற எஸ் இ கே எ ஆர் – சேகர் . இதுதான் அதற்கான அர்த்தமா? என்றார் மருத்துவர்

எஸ் சார் என்றனர் இருவரும்

சேகர் அப்படிங்கறது புனைப்பெயர் Sekar அப்படிங்க என்ற எழுத்துக்கு ஒவ்வாெரு அர்த்தம் எழுதியிருக்கு.

எஸ்ன்னா சாந்தி. இ ன்னா எலிசபெத். எஸ் ன்னா காளிதாஸ். இப்படி எழுதுற எழுத்துக்கள் என்னென்ன சேகர் என்ற ஒரு மனுஷனால இத்தனை பேரையும் உருவாக்க முடியும். அப்படிங்கிறது தான்.

ஒரு மனித இறந்துட்டாலோ இல்ல வேற விதத்துல அவங்க உயிர் இல்லாம போனாலோ ஒரு மனிதனால இத்தனை பேருக்கு இத்தனை உறுப்புகளை கொடுத்து அவங்கள வாழ வைக்க முடியும் அப்பிடிங்கிறது அதாேட அர்த்தம் என்று டாக்டர் சொன்னபோது இருவரும் வியந்தார்கள்.

சார் அப்படின்னா நாங்களும் இதைச் செய்ய முடியுமா ? என்று அசோக்கும் ஆனந்தும் கேட்டார்கள்.

கண்டிப்பாக செய்ய முடியும் என்று மருத்துவர் சொன்னபோது ஆனந்தும் அசோக்கும் தங்களுடைய உடல் உறுப்புகளைத தானம் செய்வதற்காக அந்த மருத்துவமனையில் எழுதிக் கொடுத்தார்கள்

நாளை அசோக் ஆனந்த் இருவரின் பெயரும் அந்த மருத்துவமனையில் எழுதப்படலாம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *