செய்திகள்

தலைவர் பி.டி. உஷா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்

Makkal Kural Official

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

புதுடெல்லி, அக். 24–

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார். 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில் அவர் இருந்து வருகிறார். முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷா ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை அவர் மறுத்தார். இது தொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பி.டி.உஷா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இயக்குனர் ஜார்ஜ் மேத்யூ நிர்வாக குழு மற்றும் உறுப்பினர்களுக்கு ஈ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெறும் புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *