சிறுகதை

தலைகீழ் – ராஜா செல்லமுத்து

…சினிமா, ஊடகம் வருவதற்கு முன்பு மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தது தெருக்கூத்து நாடகங்கள் மட்டும் தான்.

இதுதான் மக்களின் பிரதான கேளிக்கையாக இருந்தது. நாடகமெல்லாம்இரவில் ஆரம்பித்தால் மறுநாள் காலையில் முடியும் அளவிற்கு அவ்வளவு பொறுமையும் ரசிப்புத் தன்மையும் கொண்ட ஆட்கள் இருந்தார்கள்.

அப்படிப்பட்ட நாடகங்களில் வேலை செய்த மனிதர்கள் இன்று சினிமாவில் கொடிகட்டிப் பறந்தார்கள்.

அந்த நாடகம் தான் அவர்களுக்கு சினிமாவில் வழிகாட்டியாகவும் பயிற்சியாகவும் இருந்தது.

நாடக காலகட்டத்தில் சந்துரு கதாநாயகன். சின்னு அவருக்கு கீழே எடுபுடியாக வேலை செய்து கொண்டிருந்தார் .சந்துரு நடிக்கும் நாடகங்களில் எல்லாம் சின்னு உதவியாக இருந்து வேலை செய்து கொண்டிருப்பார்.

இரண்டு பேரும் நண்பர்கள் என்றாலும் சந்துருக்கு கிடைக்கும் மரியாதை சின்னுவுக்கு கிடைக்காது.

ஏன் உணவும் உபசரிப்பும் கூட சின்னுவுக்கு குறைவாகவே இருந்தது. இதை ஒரு முறை கண்கூடாக பார்த்த சந்துரு நாடக கம்பெனி ஆட்களை கூப்பிட்டு நேரடியாகத் திட்டினார்.

இந்தா பாருங்க சின்னு என்னுடைய நண்பன் .எனக்கு என்ன மரியாதை தர்றீங்களோ.? அத சின்னுக்கு கொடுக்கணும். அப்படி இருந்தா தான் நான் இந்த கம்பெனில நாடகத்தில் நடிப்பேன். இல்ல நான் நடிக்க மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னார் சந்துரு.

சார் நீங்க சொல்லிட்டீங்க இல்ல. நாங்க அதுபடியே நடந்துகிறோம் என்று அது முதல் சந்துருக்கு என்ன மரியாதை கிடைக்கிறதோ அதே மரியாதை சின்னுக்கும் கொடுத்தார்கள்.

ஆனால் சின்னு பத்தோடு பதினொன்றாக மட்டுமே இருந்தார்.

நாடகத்தை காலம் புரட்டிப் போட்டது. சினிமா என்ற ஒரு மாயை உலகத்திற்கு மக்கள் மட்டும் அல்ல இந்த உலகமே சிக்கிக் கொண்டு தவித்தது.

அப்படிப்பட்ட சினிமாவில் நாடகத்தில் நடித்து புகழ்பெற்ற சந்துருவால் நிற்க முடியவில்லை.

சினிமாவில் நடிக்க தெரியவில்லை அதனால் சந்துரு சினிமாவிற்கு ஒத்துவர மாட்டார் என்று அவரை யாரும் அணுகுவதில்லை .நாடகத்தில் நடித்து புகழ்பெற்ற சந்துருவை ஒதுக்கி வைத்தார்கள்

காலம் அப்படியே தலைகீழாக மாறியது.

சந்துருவின் உதவியாளராக எடுபுடியாக வேலை செய்து கொண்டிருந்த சின்னுக்கு சினிமாவில் ஜெயித்தார் .செல்லும் இடமெல்லாம் சின்னுவைப் பற்றிய பேச்சுக்கள் அவருடைய ஆளுயர கட்டவுட்டுகள் அவருடன் புகைப்படம் எடுப்பதற்கு போட்டி போடும் மக்கள் ஆட்டோகிராப் வாங்குவதற்கு அலையும் ரசிகர்கள் என்று சின்னு கொடி கட்டி பறந்தார் .

அப்போது யாருக்கு எடுபிடியாக சந்துரு இருந்தார்.

சின்னுவின் பட்டம் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே இருந்தது. உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சின்னு தெரியும் என்ற அளவிற்கு அவர் உயர்ந்து நின்றார்

அப்போது ஒரு படப்பிடிப்பு அந்த படப்பிடிப்பில் சின்னு நல்ல வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தார் .

சின்னுக்கு குடை பிடிப்பதும் அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்வதுமாய் இருந்தார் சந்துரு.

இதைப் பார்த்த சின்னு சிரித்துக் கொண்டே

பார்த்தாயா சந்துரு காலம் எவ்வளவு வேகமாக போகுதுன்னு. நீ நாடகத்தில் நடிக்கும் போது நான் உனக்கு எடுபிடி. நீ பெரிய கதாநாயகன். இன்னைக்கு பாரு நிலைமை மாறி இருக்கு சினிமாவுல நான் இன்னைக்கு பெரிய ஆள். நீ எடுபிடி இதுதான் இறைவனிடம் இருந்து வந்த மாற்றம். இத பத்தி நீ என்ன நினைக்கிற? என்று சின்னு சொன்ன போது

இந்த வார்த்தையை தன் நண்பனிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்காத சந்துருவுக்கு கொஞ்சம் கோபம் வந்தது உண்மைதான் அதனை அடக்கிக் கொண்டு அவர் மெல்ல சிரித்தவாறு

சின்னு ரொம்ப ஆடாத. இப்பக் கூட நான் பிடிச்சுகிட்டு இருக்கிற குடை நிழல்ல தான் நீ நினைக்கிற அப்படிங்கறது நீ மறந்திட கூடாது என்ற போது

சின்னுவின் மூளையில் ஓடிக் காெண்டிருந்த ஸ்டார் என்ற நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டே இருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *