செய்திகள்

தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூன்.15-

தமிழ்நாட்டில் நேற்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 2 ஆண்கள், ஒரு பெண் அடங்குவர். கொரோனா பாதிப்பில் இருந்து 3 பேர் குணமடைந்தனர். நேற்று அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 2 பேருக்கும், சென்னையில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 36 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *