சென்னை, ஜூன்.15-
தமிழ்நாட்டில் நேற்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 2 ஆண்கள், ஒரு பெண் அடங்குவர். கொரோனா பாதிப்பில் இருந்து 3 பேர் குணமடைந்தனர். நேற்று அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 2 பேருக்கும், சென்னையில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 36 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.