செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 6 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூன் 22–-

தமிழ்நாட்டில் நேற்று 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், 4 பேர் ஆண்கள், 2 பெண்கள். நேற்று சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தாய்லாந்தில் இருந்து வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 33 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் இல்லை. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. இந்த தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *