செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 5 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூன் 19–-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுபோக, சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவால் நேற்று 4 ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 பேர் குணமடைந்தனர் வீடு திரும்பினர். 34 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34 -ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *