செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 369 பேருக்கு கொரோனா

சென்னை, ஏப்.10-–

தமிழ்நாட்டில் புதிதாக 369 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 189 பேர், பெண்கள் 180 பேர் அடங்குவர். சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பயணிகளுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த பயணி ஒருவருக்கும், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த பயணி ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னையில் அதிகபட்சமாக 113 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 172 பேர் குணம் அடைந்தனர். 1,900 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று தொற்று பாதிப்பு இல்லை. கொரோனாவால் நேற்றும் உயிரிழப்பு நிகழவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *