சென்னை, ஜூன் 23–-
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் ஆண்கள், ஒரு பெண் அடங்குவர்.
நேற்று தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல், சென்னையில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். 37 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதேபோல, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.