செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூன்.30-

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதில் மலேசிய பயணி ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 3 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. நேற்றும் சென்னையை தவிர மற்ற 37 மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *