சென்னை, மே.31-
தமிழ்நாட்டில் நேற்று 7 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்குவார்கள். சென்னை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 13 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 73 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை.
மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.