செய்திகள்

தமிழ்நாட்டில் தான் கல்வியில் இலவசத் திட்டங்கள் : பீகாரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி உருக்கம்

Makkal Kural Official

சென்னை, மே 18–

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஜியா, சென்னையில் தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜியா குமாரி, சென்னை அடுத்த பல்லாவரம் அருகே கவுல் பஜாரில் உள்ள அரசு பள்ளியில் படித்து, தமிழ்நாடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 467/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழில் 93, சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஜியாவின் தந்தை தனஞ்சய் திவாரி, 17 ஆண்டுகளுக்கு முன் பீகாரில் இருந்து சென்னைக்கு வந்து கட்டிடத் தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.

கல்வி உதவியால் சாதனை

தனது மாத வருமானம் சுமார் ரூ.10,000 மட்டுமே. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச கல்வி, மதிய உணவு திட்டம், இலவச யூனிஃபாரம், காலணிகள், புத்தகங்கள் போன்ற உதவிகள் ஜியாவின் கல்வி பயணத்தில் முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜியா, சென்னையில் பிறந்தவரல்லாத போதிலும், தமிழை நன்கு கற்றுக்கொண்டு, இன்று தாய்மொழி பேசுபவர்களைப் போலவே பேசுகிறார். அவரது தமிழ் ஆசிரியர், “ஜியா பீகாரில் இருந்து வந்தவர் என்பதை அவர் பேசும் தமிழில் உணர முடியாது” எனக் கூறுகிறார்.

தமிழ் இலக்கியம், இலக்கணம், கவிதை, கட்டுரை போன்றவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார். ஜியாவின் மூத்த சகோதரி ரியா குமாரி, கணினி அறிவியலில் படித்து ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வருகிறார். இளைய சகோதரி சுப்ரியா குமாரி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் அனைவரும் வீட்டிலும், வெளியிலும் ஜியாவின் சாதனை, மொழி, சமூக, பொருளாதார எல்லைகளை மீறி, கல்வி மற்றும் உழைப்பின் மூலம் உயர்வை அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளது அவரது முயற்சி, பலருக்கும் ஊக்கமளிக்கும் உதாரணமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *