செய்திகள்

தமிழ்நாடு மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவு அருகே கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம், ஜூன் 20–

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் நெடுந்தீவு அருகில் சென்ற போது பழுதாகி விட்டது. அந்நிலையில், நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகுடன் 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

9 பேர் கைது

படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கை கடற்கரையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *