நாகப்பட்டினம், ஏப். 17–
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த தமிழக மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் என 4 பேர் விசைப் படகுகளில் மீன் வளம், மீனவர் நலத் துறையினரிடம் அனுமதி பெற்று நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளைர்கள் மீனவர்களை அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்கி கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். மேலும் விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
இந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தொடர்வது மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
––––––––
ராமேசுவரம்,ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து இன்னாசி முத்து என்பவருக்கு சொந்தமான நாட்டு படகு ஒன்றில் இன்னாசிமுத்து (வயது 50), ஆரோக்கிய ஹைடன் (23), யெகு (19), ஆல்பர்ட் (19), களஞ்சியம் (25), கென்னடி (60), சேத்தி (60) ஆகிய 7 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர்.இவர்கள் நேற்று முன்தினம் இரவில் நடுக்கடலில் மீன்பிடித்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வேகமாக வந்து நாட்டுப்படகின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படகின் முன்பகுதி பலகை சேதம் அடைந்தது. தொடர்ந்து இலங்கை கடற்படையினர், நாட்டுப்படகில் ஏறி அதில் இருந்த 7 மீனவர்களையும் கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் ரோந்து கப்பலில் அங்கிருந்து சென்றுள்ளனர்.உயிர் தப்பிய 7 மீனவர்களும் படகுடன் நேற்று பாம்பன் வந்தடைந்தனர். சேதமடைந்த நாட்டுப்படகை கரையேற்றினர். இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட 7 மீனவர்களிடமும் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசாரும், கடலோர போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது நாட்டு படகு மீனவர்களையும் தாக்கி, படகை சேதப்படுத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.”,
“மீனவர்களை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது|