செய்திகள்

தமிழகத்தில் 5 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, மார்ச் 28–

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 1–ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மதிமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்ப நிலை குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவிரிப்பாக்கம் – 2 செ.மீ., தேக்கடி, பாலாறு அணைக்கட்டு தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *