தஞ்சாவூர், ஏப். 30–
தஞ்சையில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பாலமுருகன் வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச்சென்றனர்.
நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை. அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது நடத்தப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.