செய்திகள்

தங்கம் விலை ரூ.360 உயர்வு: சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது

Makkal Kural Official

சென்னை, அக். 16–

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, முதன்முறையாக ரூ.57 ஆயிரத்தை கடந்து, ரூ.57,120 க்கு விற்பனை ஆகிறது.

இந்த மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை ரூ.57,000-த்தை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், நினைத்ததற்கு முற்றிலும் மாறாக, கடந்த வாரம் புதன்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,030 ஆகவும், பவுனுக்கு ரூ.56,240 ஆகவும் விற்று மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது.

சவரன் ரூ.57,120 க்கு விற்பனை

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,095-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.56,760-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140 ஆகவும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ரூ.57,000-த்தை கடந்து விற்பனை ஆவது இதுவே முதல்முறையாகும்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்க தேர்தல் நடக்க உள்ளது. மேலும் இஸ்ரேல்-ஈரான் போர் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, தங்கம் விலை இப்போதைக்கு குறையும் என்று சொல்ல முடியாது” என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *