செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு

Makkal Kural Official

சென்னை, பிப்.5–

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து சற்றே ஆறுதல் அளித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனையானது. பின்னர், விலை குறைந்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு சவரன் தங்கம் விலை கடந்த ஜனவரி 22ம் தேதி ரூ.60,200ம், 29ம் தேதி ரூ.60,760, கடந்த 30ம் தேதி ரூ.60,880 என தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சங்களை தொட்டது.

தொடர்ந்து 31ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.61,840-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து மத்திய பட்ஜெட் எதிரொலியாக பிப்ரவரி 1–ந்தேதியும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்தது. இதஒரு கிராம் ரூ.7,790-க்கும், ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்கப்பட்டது.

கடந்த வாரம் முழுவதும் பல புதிய உச்சங்களைத் தொட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் உயர்ந்து மற்றொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,810-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,06,000 ஆக விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *