சென்னை, பிப். 10–
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை ரூ.280 உயர்ந்து சவரன் ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்ரவரி 5-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.63,000 என்ற விலையைத் தாண்டியது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.63,560-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.280 உயர்வு
இந்நிலையில், இன்று (ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.