செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து: மீண்டும் ரூ.57 ஆயிரத்தை தொட்டது

Makkal Kural Official

சென்னை, நவ. 20–

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 56,920-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்து கொண்டே வந்தது பெண்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. அதன் பின்னர் விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 17-ந் தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இடைபட்ட 17 நாட்களில் சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 600 வரை குறைந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு பிறகு, போர் பதற்றம் சற்று குறைவாக தெரிந்த நிலையில், தங்கம் விலை குறைந்தது. ஆனால் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 56,920-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *