மீண்டும் ஒரு கிராம் ரூ.8000-ஐ தாண்டியது
சென்னை, பிப். 19–
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 64,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 3 நாட்கள் மட்டும் விலை குறைந்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில், மீண்டும் கடந்த 3 நாட்களாக உயர்ந்து அதிர்ச்சி அளித்து வருகிறது.
சவரனுக்கு ரூ.520 உயர்வு
அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 8035 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்து இன்று ஒரு சவரன் 64,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.