சென்னை, மார்ச் 5–
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த மாதம் 21 ந்தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இன்று ரூ.440 உயர்வு
பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 64 ஆயிரத்தை தொட்டது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, சவரனுக்கு ரூ.560 அதிகரித்தது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.107 க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.