சென்னை, நவ. 21–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 45840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன்–ரஷ்யா போர் தொடங்கி, பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை பெரும் பாலும் ஏற்றத்துடனேயே இருந்து வருகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும் மீண்டும் அடுத்த சில நாட்களில் விலை உயர்ந்து விடுவது வாடிக்கையாகவே உள்ளது.
சவரனுக்கு ரூ. 200 உயர்வு
அந்த அடிப்படையில் சென்னையில் 22 கிராம் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 45840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 40 பைசா உயர்ந்து ரூ.79.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து ரூ.79,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.