செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்வு

Makkal Kural Official

சென்னை, ஏப். 9–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த பிப்ரவரி 21 ந்தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 68 ஆயிரத்தை தொட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை மீண்டும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சவரனுக்கு ரூ.520 உயர்வு

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்.9) அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8290 க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.102 க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,02,000 க்கும் விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *