சென்னை, மார்ச் 27–
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65ஆயிரத்து 880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தாலும், படிப்படியாக ஏறியே வந்துள்ளது. கடந்த மாதம் 21 ந்தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்த படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 64 ஆயிரத்தை தொட்டது.
ரூ.320 உயர்வு
அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 235-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.