செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்வு

Makkal Kural Official

சென்னை, ஜன. 29–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து, சவரன் ரூ.60,760 என புதிய உச்சத்தை தொட்டு விற்பனை ஆகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

சவரனுக்கு ரூ.680 உயர்வு

இதற்கிடையே, கடந்த 21 ந்தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்த நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,080-க்கும், கிராமுக்கு ரூ.7,510-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக எகிறியுள்ளது. அதன்படி, 22 ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,595 க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60,760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *