செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு

Makkal Kural Official

சென்னை, டிச. 03–

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே இறங்குமுகத்தில் இருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே இறங்குமுகத்தில் இருந்து வந்தது.

சவரனுக்கு ரூ.320 உயர்வு

இந்நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதையொட்டி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஒரு கிராம் வெள்ளி ரூ.100 -க்கும் , ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *