செய்திகள்

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: ரேகா குப்தா அறிவிப்பு

Makkal Kural Official

புது டெல்லி, பிப். 20-

ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக காஷ்மீரி கேட்டில் உள்ள ஸ்ரீ மார்கட் வாலே ஹனுமான் பாபா கோவிலுக்கு ரேகா குப்தா சென்று வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை எனது அரசாங்கம் நிறைவேற்றும். மாதாந்திர உதவியின் முதல் தவணை மார்ச் 8ம் தேதிக்குள் தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எங்களது முதன்மையான முன்னுரிமை ஆகும். பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவது 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும். பெண்களுக்கு நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். மார்ச் 8ம் தேதிக்குள் தகுதியுடைய பெண்கள் தங்கள் வங்கி கணக்குகளில் 100 சதவீதம் உதவித்தொகையை பெறுவார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *